Sunday, September 13, 2009

வாடகை சைக்கிள்



பள்ளம், மேடு
காடு ,கழனி,
நீர் வற்றிய
ஆற்று மணல்வெளி ,
எல்லாவற்றையும்
நான் கடந்து செல்ல
உதவியது நீ !
நான் உயரங்களை
அடைய உதவிய
நீ, என் துயர
நேரங்களிலும்
உடனிருந்திருக்கிறாய் !
உன்னுடனே வெகு தூரம்
பயணித்தாலும்
நீ என்னுடையதில்லை ;
என் பயணம்
முடிந்த பின்
உன்னை
ஒப்படைத்து
செல்ல வேண்டும்

Wednesday, September 9, 2009

குடைக் கவிதை



கண்ணை பறிக்கும்

வண்ணங்கள் அதில்,

கையில் அடக்கி விடும்

வசதி அதில்,

, ஒரு நுனியில் இருட்டில்

ஒளி தரும் கைவிளக்கும்

உண்டு

, வெளி நாட்டு தயாரிப்பில்

வாங்கிய அந்த குடை

வண்ண மயமாய்,

வசதியாய்,

ஒளி விளக்காய்

, இருந்த போதிலும்,

மழையின் போது

குடையாய் மட்டும்

உபயோகிக்க

முடியவில்லை.

புலி பசித்தாலும்

புல்லை தின்னாது !

எலி பசித்தால்

குடையை தின்னுமா ?

Friday, September 4, 2009

கடவுள் உண்டா, இல்லையா?


உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யென்பவர்களுக்கு இல்லை" என்று சொல்வோம். நாம் மெளனமாயிருப்பதே அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் அளிக்கும் விடையாகும். அவ்விடையின் கருத்தையறியாமலே அவர்கள் தாம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டாமல் சும்மாவிருப்பதாக எண்ணிக்கொள்ளக்கூடும். நாம் "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்று சொன்னால், அவர்கள் கைகொட்டி நகைத்து, "இது கோமுட்டி சாஷி சொன்னதுபோலாம். ஏக காலத்தில் உள்ளதாகவும் இல்லாததாகவும் இருக்கும் ஒருபொருளை நாம் எங்கும் கண்டதில்லை. அவ்வாறான பொருள் ஒன்றிருக்கும் என்பது மலடி மக்களைப் பெற்றாள், குருடன் கண்ணாரக்கண்டான், செவிடன் காதாரக்கேட்டான், முயலின் கொம்பு மூன்று முழ நீள மிருக்கும், என்பன போல் பொருளில்லாதனவாகிய வெறுஞ் சொற்களாம்" என்பார்கள். ஆதலால் நாம் அவர்களுக்களிக்கும் விடைகள் இரண்டனுள் முன்னே முதலில் அளிக்கும் மெளன விடையின் கருத்தை விளக்குவோம்.

நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் "கடந்துநிற்றலையுடையது" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம். எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் "மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள" என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை யுன்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.

உரையுணர்விறந்த ஒருபெரும்பொருளே கடவுள் ஆதலால் அப்பொருளை உரையும் உணர்வும் அற்ற நிலையினரே அறிதற்பாலார். ( இவ்விடத்தில் உணர்வு என்பது சடப்பொருளாகிய கரணங்களாற் சுட்டியறியும் அறிவை). உரையுணர்வற்ற நிலையே மனமும் வாக்கும் இறந்த நிலையெனவும், பரமஞான நிலையெனவும் மோன நிலையெனவும் சொல்லப்படும். இது மோனமென்பது " ஞான வரம்பு" என்பதனால் உணரப்படும். அந்நிலை கடவுளோடு அது வதுவாய் (அத்துவிதமாய்) இருந்து இன்பம் நுகர்வதாகிய அநுபவ மாத்திரமா யிருப்பதன்றி, வாயினாலெடுத்துரைக்கப்படுவதன்று. இதுபற்றியே மேலோர் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்பர். நமது காரைக்காலம்மையாரும் திருமூலநாயனாரும் முறையே.

அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டே
னின்றுந் திருவுருவங் காண்கிலே - னென்றுந்தா
னெவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கே
னெவ்வுருவோ நின்னுருவ மேது எனவும்,

உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடையோனே.

எனவும் அருளிச் செய்தார்கள்.

ஒருவன் மரணாவஸ்தைப்படும்போது அவனுடைய சுற்றத்தார்கள் அவனைநோக்கி "அப்பா, நீபடும் வேதனையை நாங்கள் அறியச் சொல்" என்று கேட்டால் அவன் "ஐயோ, நான்படும் வேதனையை உங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பேன்" என்றான். இப்படியே ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை யொருவர் மருவி அனுபவிக்குங் கலவி யின்பத்தைப் பிறர்க்குச் சொல்ல இயல்வதில்லை. இச்சிற்றன்பமும் அனுபவமாத்திரமாயிருப்பது மாத்திரமின்றி, அதற்குரிய பருவம் வந்தபிறகே அனுபவத்திற்கு வருகிறது. இதனை "கன்னிகை யொருத்தி சிற்றின்பம் வேம்பெனினுங் கைக்கொள்வள் பக்குவத்தில், கணவனருள் பெறின் முனே சொன்னவா றென்னெனக் கருதி நகையாவள்" என்னுந் தாயுமானசுவாமிகள் திருவாக்கும் உணர்த்தும். அதுபோல் பேரின்பமயமாயிருக்கும் கடவுளை மலபரிபாகம் பெற்ற ஞானிகளும் இரண்டறக்கூடி இன்ப மார்ந்திருப்பரேயன்றி பிறர்க்கெடுத்துரையார். ஆதலால், நாமும் நாத்திகர் கேட்கும் கேள்விக்கு விடை வாயினாற் சொல்லப்படுவதன்று என்பதைக் குறிப்பாய் உணர்த்தவேண்டி மெளனமாயிருந்து விடுவோம்.

இனி "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பதை விளக்குவாம். ஒருவன் தன் குழந்தையின் மீது வைத்த (பற்று எனப்படும்) அன்பினால் அக்குழந்தையைக் காணும்போதும், அதின் சொற்களைக் கேட்கும்போதும், அதைத் தீண்டும்போதும் இன்பம் அடைகின்றான். அவ்வாறே மனைவி மாடு வீடு முதலியவற்றினிடத்தும் வைத்த அன்பினால் இன்பம் அடைகின்றான். இதனால் பிரபஞ்சத்தில் உயிர்களுக்கு உண்டாகும் இன்பத்திற்குக் காரணம் பிரபஞ்சப்பொருள்களிடத்தில் வைத்த அன்பே என்பதும், அன்பு எங்கு உண்டோ அங்கு இன்பம் உண்டு என்பதும் விளங்கும். சிறியபொருளாகிய பிரபஞ்சத்தில் வைத்த அன்பினால் சிற்றின்பம் உண்டாவதுபோல் பெரிய பொருளாகிய கடவுளிடத்தில் வைத்த அன்பினால் பேரின்பம் தோன்றும். இதனை "அன்பினில் விளைந்தவாரமுதே" என்னுந் திருவாசகத்தாலுணர்க. இன்பம் கடவுளின் உருவமாதலாலும் அவ்வின்பம் அன்பினால் உண்டாவதனாலும், அன்பிலார்க்கு இன்ப முமில்லையாகையாலும், கடவுளை விசுவசித்து அன்புசெய்வார்க்கு அவர் உளராகவும், அன்பு செய்யாதவர்க்கு இலராகவுமிருக்கிறார்.

அன்றியும் "குழந்தையுந் தெய்வமுங் கொண்டாடுமிடத்தில்" என்னும் பழமொழியின்படி குழந்தையானது தன்னை ஆசையோடு செல்வமே கண்ணே கண்மணியே யெனப் பலகூறி கையிலேந்தியும் மார்போடணைத்தும் முத்தமிட்டும், பாலூட்டியும், தாலாட்டியும், வளர்ப்பவர்களிடம் தானும் ஆசையோடு சென்று அவர்கள் மடிமீதிருந்து விளையாடுவது போல், கடவுளும் தம்மைநேசித்து அபிஷேகித்தும், அலங்கரித்தும், அருச்சித்தும், தோத்திரங்கள் பாடியும் திருவிழாக்கொண்டாடியும், வணங்குவார்க்கு எளியராய் அவர் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு வெளிப்பட்டருளுவர். மற்றவர்களுக்கு அவ்வாறு வெளிப்பட்டருளுவதில்லை.

தமிழ்வேதம்

எந்தை யீசனெம்பெருமா னேறமர் கடவுளென்றேத்திச்
சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்
கந்தமாமலருந்திக்கடும் புன னின்வாமல்குகரைமே
லந்தண்சோலை நெல்வாயி லரத்துறையடிகடம்மருளே.

வைத்தநிதியேமணியே யென்றுவருந்தித்தஞ்
சிந்தைநைந்துசிவனே யென்பார்சிந்தையார்
கொத்தார்சந்துங்குரவும் வாரிக்கொணர்ந்துந்தி
முத்தாறுடையமுதல்வர்கோயின்முதுகுன்றே.

உலகத்தில் கடவுள் உண்டு என்று நம்பி அவரை வழிபடுவோருள்ளும் தம்முடைய அன்பெல்லாம் மனைவி மக்களிடத்திலும் செல்வ முதலியவற்றிலுமே அழுந்தவைத்திருப்பவர்களுக்கும் கடவுள் இலராகவேயிருக்கின்றார். இவ்வாறு சிற்றின்பப் பிரியராய் பிரபஞ்ச வாழ்க்கையையே பெரிதாக மதித்துக் கடவுளையும் அவராலுண்டாகும் பேரின்பத்தையும் இழப்பார்க்கு இரங்கியே நமது மாணிக்க வாசகசுவாமிகள்.

தினைத் தனையுள்ளதோர் பூவினிற்றேனுண்ணாதே
நினைத் தொறுங்காண்டொறும் பேசுந்தொறுமெப்போதும்
அனைத் தெலும்புண்ணெக வானந்தத்தேன்சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய்கோத்தும்பீ.

என்றருளிச்செய்தனர்.

கடவுளை அவரருளையே கண்ணாகக் கொண்டு காணவேண்டுமே யன்றி ஆணவமலத்தால் மழுங்கிக் கிடக்கும் சுட்டுணர்வைக் கொண்டு காணலாகாது.

அருளைக் கண்ணாகக் கொண்டு காணும் ஞானிகளுக்குப் பேரொளியாகிய பரசிவம் தோன்றும்; பிரபஞ்சந் தோன்றாது. சுட்டி யறியும் அறிவைக் கொண்டு காணும் ஏனையோர்க்கு அந்தகாரமாகிய பிரபஞ்சந்தோன்றும்; சிவம் தோன்றாது.

தாயுமானசுவாமிகள் பாடல்

"அருளாலெவையும் பாரென்றான் - அத்தை, யறியாதே சுட்டி யென் அறிவாலே பார்த்தேன் - இருளான பொருள் கண்ட தல்லால் - கண்ட வென்னையுங் கண்டில னென்னேடி தோழி - சங்கர சங்கர சம்பு."

திருத்தாண்டகம்

"மைப்படிந்த கண்ணாளுந்தானுங் கச்சிமயானந்தான் வார்சடையானென்னினல்லா. னொப்புடையனல்ல னொருவனல்ல னோரூரனல்ல னோருவமனில்லி, யப்படியு மந்நிறமு மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லா, லிப்படிய னிந்நிறந்த னிவ்வண்ணத்த னிவனிறைவ னென் றெழுதிக் காட்டொணாதே."

இவ்வாறு, சுத்தாத்வைத சித்தாந்த சைவநெறியைக் கடைப் பிடித்துச் சரியை கிரியா மார்க்கங்களிலிருந்து தம்மை வழிபடுவார்க்குச் சிவபெருமான் படர்க்கையாகவும், சிவயோகிகளுக்கு முன்னிலையாகவும், சிவஞானிகளுக்குத் தன்மையாகவும் இருந்து, அருள்செய்வதனாலும், அவரை வழிபடாதவர்க்கு அவர் அவ்வாறிருந்து அருள் செய்தலில்ல்லாமையாலும், நாம்" கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பது.

திருவாசகம்

வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி
யூனாகி யுயிராகி உண்மையுமா யின்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.

("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை).

Wednesday, August 19, 2009

பெண்களுக்கு மட்டும் !

பெண்களுக்கான அழகிய மெகந்தி டிசைன்கள்.,,,












Tuesday, August 11, 2009

கிருஷ்ண ஜெயந்தி



பகவான் கிருஷ்ணர் அவரது மனைவி ருக்மணியுடன் , துவாரகையில் வசித்து வந்தார். ஒரு நாள் ஒரு முனிவர் , கண்ணா ! உன்னுடைய தலை சிறந்த அன்பு கொண்டிருப்பது யார் எனக் கேட்டார் ?, ருக்மணி தன் பேரை தான் பகவான் சொல்லுவார் என ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தாள். அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், என் மேல் அதிகமான அன்பு வைத்திருப்பது ராதா தான், என்றார். ருக்மணி கோபத்துடனும், பொறாமையுடனும் உள்ளே சென்று விட்டாள். கிருஷ்ணர் புன்னகைத்து கொண்டார்.
சில நாட்கள் கழித்து, கிருஷ்ணர் ஒரு நாள் தீராத வயிற்று வலி வந்து மிக வேதனையுடன் அவதிப்பட்டார். ருக்மணி பதறி போய், மருந்து களை அளித்தாள், இருந்தும் வலி குறையவில்லை., கிருஷ்ணரின் வேதனையும் தீரவில்லை.
அப்போது அங்கு வந்த நாரத முனிவர், இந்த வலி தீர வேண்டுமானால் , பகவானின் உண்மையான பக்தர் யாராவது, தன் பாதங்களை கழுவி அந்த நீரை சிறுது பகவானுக்கு கொடுத்தால் , அவரின் வலி தீர்ந்து விடும் என்றார்.
உடனே கிருஷ்ணர் , ருக்மணியிடம் , உன் பாதங்களை கழுவி அந்த நீரை உடனே கொடு , என்னால் வலி பொறுக்க முடியவில்லை என்று கெஞ்சினார்.
திடுக்கிட்டு போன ருக்மணி சொன்னாள், நீங்களோ உலகை எல்லாம் காக்கும் கடவுள் , உங்களுக்கு என் பாதம் பட்ட நீரை அளித்தால், நிச்சயம் எனக்கு நரகம் தான் கிடைக்கும் ! இப்படி ஒரு பாவ செயலை செய்ய நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்.
கிருஷ்ணர் , நாரதரை அழைத்து , நீங்கள் பிருந்தாவனத்துக்கு சென்று யாரிடமாவது , என் நிலைமையை எடுத்து கூறி , உடனே அவர்களின் பாதம் கழுவிய நீரை பெற்று வாருங்கள் , என்று அனுப்பி வைத்தார்.
சிறிது நேரத்திலேயே நாரதர் ஒரு கிண்ணத்தில் நீருடன் வந்தார் . கிருஷ்ணர் அந்த நீரை சிறிது பருகிய உடனேயே அவரின் , வயிற்று வலி சட்டென குணமாகி விட்டது. பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார்.
ருக்மணி நாரதரிடம் ஆவலாய் , யார் சுவாமி , பகவானுக்கு பாத நீரை தைரியமாக கொடுத்தது ? என்று கேட்டாள் . நாரதர் சொன்னார் , நான் போய் பிருந்தாவனம் முழுதும் சுற்றி பகவானின் நிலைமையை எடுத்து கூறி கேட்டும் யாரும் கொடுக்க தயாராக இல்லை ! அப்போது ஒரு சிறுமி வந்து தன் பாதங்கள் கழுவிய நீரை கொடுக்க ஓடி வந்தாள். அவளது தோழியர் அவளிடம் , ராதை ! நீ பெரும் பாவத்தை செய்ய போகிறாய் ! பகவானுக்கு உன் பாதம் பட்ட நீரை கொடுத்தால் நீ ஏழு ஜென்மத்திற்கும் நரகத்தில் தள்ள படுவாய் ! என்று தடுத்தனர்., ஆனால் அதற்கெல்லாம் கவலை படாத ராதை கூறினாள், " எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை ! ஆனால் என் பகவான் கிருஷ்ணர் , வலியில் அவதி படுவதை என்னால் தாங்க முடியாது " என்று கூறி , அவள் தான் கொடுத்தாள், என்றார்.

ருக்மணி பக்கம் திரும்பிய கிருஷ்ணர் ," பார்த்தாயா ருக்மணி , எனக்காக ராதை நரகத்திற்கு கூட செல்ல தயாராகி விட்டாள் ! அவள் என்னை பற்றி மட்டுமே கவலை பட்டாள் . தனக்கு என்ன நேர்ந்து விடுமோ என தன்னை பற்றி எள்ளளவும் கவலை படவில்லை " இதுவன்றோ உண்மையான அன்பு , எந்த நிபந்தனைகளும் அற்றது ! தியாக உணர்வு கொண்டது !! இதுவே தலை சிறந்த பக்தி , ராதையே தலை சிறந்த பக்தை என்றார், தலை குனிந்து ருக்மணி ஒப்பு கொண்டாள்.
டிஸ்கி : நமக்கு என்ன நடக்கும் என நினைத்து செய்யப்படும் எந்த செயலும் அன்பின் பாற்பட்டது ஆகாது ! ஆகவே எதிர் பார்ப்பில்லாத அன்பினை உலகிற்கு அளிப்போம் ! !!

Wednesday, July 22, 2009

ஆதலினால் காதல் செய்வீர் !




ஒரு ஆசிரியர் , மாணவர்களிடம் " கோபம் வந்தால் நாம் ஏன் சத்தமாக பேசுகிறோம் ? மக்கள் ஆத்திரத்தில் ஆவேசமாக உரத்த குரலில் பேசி சண்டை இட்டு கொள்வதேன் ? ,என்று கேட்டார்.
ஒரு மாணவன் எழுந்து , " கோபம் வரும் போது, நாம் அமைதியை இழந்து விடுகிறோம்,அதனால் கத்துகிறோம் " என்றான் .
" சரி, ஆனால் நம்மை கோபப் படுத்திய நபர் ,மிக அருகில் இருக்கும் போது , உரத்த குரலில் ,தடித்த வார்த்தைகளில் பேசுவதின் காரணமென்ன ? நாம் சொல்ல நினைப்பதை மெதுவான குரலில் ஏன் சொல்ல முற்படுவதில்லை ? " - ஆசிரியர் .
மாணவர்கள் பல பதில்கள் சொன்னாலும் , அவை சரியான காரணத்தை விளக்காததால் , ஆசிரியர் தொடர்ந்தார்., " இரு மனிதர்கள் கோபப் படும் போது , அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக அதிகரித்து விடுகிறது, அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காகவே , இருவரும் உரத்த குரலில் பேசுகின்றனர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் உள்ளதோ , அவ்வளவு சத்தம் தேவைப் படுகிறது.,
அன்பு வயப்பட்ட இருவர் ( நண்பர்கள் /காதலர்கள் ) பேசும் போது
சத்தம் போட்டு பேச அவசியம் இருக்காது ,ஏனெனில் அவர்களின் இதயத்துக்கு இடையே ஆன தூரம் மிக குறைந்து விடுகிறது.
மனமொத்த காதலர்கள் பேச வேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை , ஒருவர் முனுமுணுத்தாலே, மற்றவர் புரிந்து கொள்வார். ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது .
இறுதியாக இதய பரிமாற்றம் செய்து கொண்ட காதலர்களுக்கு ,வார்த்தை பரிமாற்றமே தேவை படுவதில்லை .கண்களின் மூலமே பேசி கொள்கின்றனர்.

டிஸ்கி : விவாதங்களின் போது இதயங்களை தூரப் போகும் படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள் ., மற்ற இதயங்களுக்கு செல்லும் பாதை ஒருவழிபாதை., ஒரு முறை தூரமாக சென்று விட்டால் ,மறுமுறை அருகில் வருவது கடினம்.,

எங்கேயோ படித்த கவிதை :
என் மௌனமே உனக்கு
புரியா விட்டால் ,
வார்த்தைகளால்
என்ன பயன் ?

Tuesday, July 14, 2009

கர்ம வீரர் பிறந்த நாள் - சில நினைவுகள்



1971 - ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது.

தொண்டர்கள் காமராஜரிடம் வந்து,

”ஜயா! அவர்கள் வெற்றிக்கு காரணம் ”ரஷ்ய மை” வைத்து ஏமாற்றி விட்டார்கள். வாக்குச் சீட்டில் ரஷ்ய மை தடவிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட காமராஜர்,

”ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” - என்றார்.

முதலமைச்சர் ஆனதும் காமராஜர் பேசிய பேச்சில் ,

” நான் ஏழைகளின் துயர் நீக்கவே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்கு இடமில்லை என்றால் எனக்கு இப்பதவி தேவை இல்லை.” என்றார்.

ஏழையாகப் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, எந்தச் சூழ்நிலையிலும் ஏழைகளின் துயரங்களை நீக்கவே எண்ணிப் பாடுபட்ட காமராஜரை ”ஏழைப் பங்காளன்” என்று சொல்வதிலே தவறில்லை தானே.

அப்போது காமராஜர் பதவியில் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது.

அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.

”பார்க்க முடியாதுன்னேன்” - என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள்.

அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்” என்றார் காமராஜர்.

இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும் அண்ணாத்துரைக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்குக் கண்டனமும் தெரிவித்ததையும் தானே காட்டுகிறது.

Friday, July 3, 2009

லஞ்சத்தை தடுக்க இப்பிடி ஒரு வழி !!





நேபாள நாட்டு விமான நிலையத்தில் ஊழியர்கள் சரமாரியாக லஞ்சம் வாங்குவதைத்
தடுக்க ஊழியர்களுக்கு பாக்கெட்களே இல்லாத பேன்ட்களை கொடுக்க அந்த நாட்டு ஊழல் ஒழிப்பு
வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.

நேபாள நாட்டில் ஒரே ஒரு விமான நிலையம்தான் உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள
திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள், பயணிகளிடம் பெருமளவில் லஞ்சம்
வாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதை ஒழிக்க தற்போது வித்தியாசமான ஐடியாவை உருவாக்கியுள்ளது நேபாள லஞ்ச ஒழிப்பு வாரியம்.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஐஸ்வரி பிரசாத் பெளத்யால் கூறுகையில்,
பெருமளவில் புகார்கள் வந்ததால் கண்காணிப்புக் குழுவை விமான நிலையத்திற்கு அனுப்பினோம்.
அதில் லஞ்சம் வாங்குவது உண்மை என்று தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்களுக்கு பாக்கெட்டே இல்லாத பேன்ட்களைக் கொடுக்க முடிவு
செய்துள்ளோம். இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரையை
அனுப்பியுள்ளோம். விரைவில் இது நடைமுறைக்கு வரும்.

இதன் மூலம் ஓரளவு லஞ்சம் குறையும் என நம்புகிறோம். இதற்கும் ஊழியர்கள் கட்டுப்படாவிட்டால்
அவர்களை வேலையிலிருந்து நீக்குவது ஒன்றுதான் வழி என்றார்.

நேபாள நாட்டின் முக்கியத் தொழிலே சுற்றுலாதான். இங்கு 3 லட்சம் பேர் சுற்றுலாவை நம்பி
உள்ளனர்.

கடந்த ஆண்டு நேபாளத்திற்கு 4.50 லட்சம் பேர் சுற்றுலா வந்தனர். இந்த ஆண்டு 10 லட்சம் பேரை
ஈர்க்க நேபாளம் திட்டமிட்டுள்ளது. ஆனால் விமான நிலையத்தில் நிலவும் இந்த லஞ்சப் பேயால்
பயணிகள் பெருமளவில் அதிருப்திக்குள்ளாவதாக புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து அவர்களது
பாக்கெட்டில் கை வைத்துள்ளது அரசு.

Thursday, July 2, 2009

வரவேற்போம், வணங்காமன் கப்பலை !


வணங்காமன்னுக்கு அனுமதி கிடைத்து விட்டது .

இலங்கை தமிழர்களுக்கான நிவாரண பொருட்களை சுமந்து வந்த வணங்காமண்
கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கேப்டன் அலி என்ற கப்பலுக்கு வணங்காமண் என பெயர்
சூட்டி சுமார் 884 டன் எடை கொண்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

கடந்த மாதம் 4ம் தேதி இலங்கை வந்த அந்த கப்பலில் ஆயுதங்கள் இருக்கலாம் என
கூறி இலங்கை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. இதையடுத்து சென்னை நோக்கி
வந்த கப்பலுக்கு இந்திய கப்பற்படையும் சோதனை கொடுத்தது. அந்த கப்பலை
சென்னை துறைமுகத்துக்கு வெளியே நடுக்கடலில் நிறுத்தி வைத்தது.

இதையடுத்து வணங்காமண் கப்பலை சென்னைக்கு துறைமுகத்துக்கு கொண்டு வர
அனுமதி வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலரும்
வலியுறுத்தினர்.

இந்நிலையில் மனிதாபிமான நடவடிக்கையாக இந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு
வர அனுமதி அளிப்பதாக மத்திய கப்பல்துறை போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.
வாசன் தெரிவி்த்துள்ளார்.

இதை தொடர்ந்து சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கேப்டன் சுபாஷ்
குமார் கூறுகையில்,

வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதை நான்காவது தளத்தில் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த கப்பல் இங்கு வந்தவுடன் அதில் இருக்கும் பொருட்களை உள்ளூர்
போலீசாரும், கப்பற்படையும் சோதனையிடுவார்கள்.

அதன் பின்னர் இந்த பொருட்கள் வேறொரு கப்பல் மூலம் இன்னும் நான்கு
நாட்களில் கொழும்பு அனுப்பி வைக்கப்படும் என்றார் சுபாஷ் குமார்.

அங்கிருந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள்
தமிழர்களுக்கு வினியோகிக்கப்படும்.

Tuesday, June 30, 2009

புகைக்கு தடை - ஒபாமா சட்டம்..

இனியாவது திருந்துங்க புகை பிடி கலைஞர்களே !




இளைஞர்களிடையே நிலவும் புகை பிடிக்கும் பழக்கத்திற்குத் தடை விதிக்கும்
வகையிலான புதிய சட்டம் அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.

குடும்ப புகை பிடித்தல் தடை மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற பெயர் கொண்ட
இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை அந்நாட்டு உணவு மற்றும் மருந்துத்துறை மேற்கொள்ளும்.

இந்த சட்டத்தின் மூலம் இளைஞர்களை அதிகம் கவரும் வாசனையான சிகரெட் மற்றும் சிறிய வகை
சிகரெட்கள் தடை செய்யப்படும்.

மேலும், லைட்ஸ், மைல்ட் என்ற பெயரில் வெளி வரும் சிகரெட்களுக்கும் தடை விதிக்கப்படும்.
இதுதவிர புகையிலைப் பொருட்கள் மீது கண்டிப்பாக இனி எச்சரிக்கை வாசகங்களையும் பொறிக்க
வேண்டும்.

அதேபோல இனிமேல் தயாரிக்கப்படும் சிகரெட்களில் நிக்கோடின் அளவையும் சிகரெட் தயாரிப்பு
நிறுவனங்கள் குறைக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் நடந்தது.

அப்போது ஒபாமா பேசுகையில் பல காலமாகவே நாம் எதிர்பார்த்து வந்த மாற்றத்தை இந்த சட்டம்
[^] தரும். நமது குழந்தைகளை அபாயத்திலிருந்து காக்க இந்த மாற்றம் வந்துள்ளது என்றார்.

அமெரிக்காவில் புகை பிடிக்கும் பழக்கத்தால் பலர் இறக்கிறார்கள். இறப்பு அளவு குறைந்த
போதிலும் கூட ஆண்டுக்கு 4 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை 100
பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அரசின் இந்த சட்டத்தை பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஆல்ட்ரியா குரூப்
வரவேற்றுள்ளது. இருப்பினும் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீய அம்சங்கள் குறித்து
இளைஞர்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என இது கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் மால்போரோ, விர்ஜீனியா ஸ்லிம்ஸ், பேசிக், செஸ்டர்பீல்ட்
ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்க இளைஞர்களிடையே கணிசமான அளவுக்கு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பும்
காணப்படுகிறது.

52 சதவீதம் பேர் இதை எதிர்த்துள்ளனர். 46 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஒபாமா இப்படிச் சொன்னார் - சிகரெட்டை கைவிடுவது என்பது
இளைஞர்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.
நானும் ஒரு காலத்தில் டீன் ஏஜில் இருந்தவன்தான். இருப்பினும் முயன்றால் முடியாதது இல்லை
என்றார் ஒபாமா.


Thursday, June 18, 2009

ஆகஸ்ட் 7 ஆம் தேதி என்ன ஆச்சர்யம் ?வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நிகழும் அதிசயம் !!



ஆகஸ்ட் 7 , 2009 . பகல் 12 மணி,34 நிமிஷம் 56 செகண்டு, இந்த நொடி நம் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் அதிசய நொடி. அப்போது நேரமும் ,தேதியும் இவ்வாறாக இருக்கும் .....
12:34:56 07/08/09 1 2 3 4 5 6 7 8 9 இது போல் ஒரு நொடி இனியும் வருமா ?

ஒரு idea உங்களை மாற்றலாம் ! ஒரு பெண் உங்கள் idea வை மாற்றலாம் !!

ஹி,ஹி, இந்த ஐடியா எப்படி இருக்கு ?

உங்கள் வேலை உங்களுக்கு கடினமாக இருக்கிறதா ? இவர்களின் வேலையை பார்த்து விட்டு சொல்லுங்கள் !

என்று ஒழியும் இந்த குழந்தை தொழிலாளர் முறை ?















Sunday, June 14, 2009

மிரள வைக்கும் அலைகள் .

மிரள வைக்கும் அலைகள் ஒரு அரிய படத் தொகுப்பு..














Monday, June 8, 2009

கடற்கரையில் அழகிகள் ............



ஹி,ஹி.....

Wednesday, June 3, 2009

பசங்க - விமர்சனம் அல்ல











பசங்க ???
................